BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 6 May 2014

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவர் பலி; காரணம் மின் தடையா?


சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவைச் சேர்ந்தவர் பொன்முருகன் (வயது47). சாலை விபத்தில் சிக்கி தலை மற்றும் காலில் பலத்த காயம் அடைந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். கவலைக்கிடமான சூழ்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டி லெட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை இறந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது அப்போது ஜெனரேட்டர் செயல்படவில்லை என்றும் அதனால்தான் தனது கணவர் இறந்து விட்டதாகவும் நவநீதம் ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது குற்றம் சாட்டினார்.

இதை நிராகரித்து, மருத்துவமனையின்  டீன் விமலா கூறியதாவது:–

இறந்ததாக கூறப்படும் நோயாளி பொன்முருகனுக்கு வயிறு, தலை இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவரது நிலைமை மோசமாக இருந்தது. அதனால்தான் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மின்சாரம் தடைப்பட்டதால் அவர் இறக்கவில்லை. மின்சாரம் தடைப்பட்டாலும் தொடர்ந்து 2 மணி நேரம் வெண்டிலெட்டர் செயல் படக்கூடிய வசதி உள்ளது. எனவே அவரது இறப்பிற்கும் மின்தடைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media