BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 4 June 2014

"கெப்லர் 10c" இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு இருக்கிறது !!!!



சிலி நாட்டில் கேனரி தீவில் ஹார்ப்ஸ் என்னும் கருவியை உபயோகித்து விஞ்ஞணிகள் இந்த பூமியைப் போன்று பிரம்மாண்ட கிரகத்தைக் கண்டு பிடித்து உள்ளனர் . இதற்கு கெப்லர் 10சி என்று பெயரிட்டுள்ளனர் .

இந்த கிரகம் ட்ரகோ என்னும் நட்சத்திரக் குவியலில் உள்ளது . இந்த நட்சத்திரக் குவியல் பூமியில் இருந்து 564 ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ளது . இந்த ட்ரகோ குவியலில் தான் ஏற்கனவே கண்டுபிடித்த கெப்லர் 10பி என்ற கிரகமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 

இந்த கிரகம் 29,000கிமீ விட்டம் கொண்டது , அதாவது பூமியை விட 2.3 மடங்கு பெரியது . இது நம் பூமியை விட 17 மடங்கு கனமானது . இந்த கிரகம் 45 நாளுக்கு ஒரு முறை சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது .
 இந்த கிரகத்திற்கு 11 பில்லியன் வயது அதாவது  பெரிய வெடிப்பு நடந்து 3 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின் உருவானது . 

இந்த கிரகத்தை 2011 ஆம் ஆண்டிலே கண்டுபிடித்து இருந்தாலும் , இன்னும் சில ஆய்வுகளினால் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது . நம் பூமியை விட மிக கனமாக இருக்கிற காரணத்தால் இந்த கிரகம் அடர்ந்த அமைப்புகள் கொண்ட பாறையினால் உருவாகி இருக்கும் என வல்லுணர்கள் கருதுகின்றனர் . மற்ற பெரிய கிரகங்கள் என நாம் கருதும் வியாழன் அடர்ந்த ஹட்ரஜன் வாயுவினால் மிக கனமானதாக இருக்கிறது . 

பிரபல வல்லுநர் ஒருவர் கூறுகையில்  , " நம்மால் பாறைகளை உருவாக்க முடிந்தால் , உயிர்களை உருவாக்கலாம் " என்றார் . இதன்மூலம் அந்த கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்பு இருப்பதை நம்மால் ஊகிக்க முடியும் .   


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media