மும்பை பகுதியைச் சேர்ந்த சர்கார் (வயது 7) என்ற சிறுமி வீட்டில் தனது தந்தையுடன் இருந்தார். அவரது தந்தை வெளியே சென்றதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரரான பிரோகாஷ் ஹஜ்ரா (வயது 30) சர்கார் வீட்டிற்குள் நுழைந்தார். போனில் சார்ஜ் இல்லை. ஆகையால் சார்ஜர் கொடு என்று கேட்டார். தனது பக்கத்து வீட்டுக்காரர்தானே என்று அவளும் சார்ஜர் எடுத்து கொடுத்தார். அந்த வேளையில் அங்கிருந்த 20 ரூபாயை திருடினார்.
இதை பார்த்த சர்கார், வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த தனது அண்ணன் சாஹரை கூச்சலிட்டு அழைக்க முயன்றார். சாஹர் வந்து விட்டால் தான் திருடியது தெரிந்து விடும் என்பதால் சர்காரை பிடித்து பக்கத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தார்.
பின்னர், ஹஜ்ரா கதவை மூடி விட்டு சென்றுவிட்டார். அந்த வேளையில் வெளியில் சென்றிருந்த சர்காரின் அம்மா வீட்டிற்கு திரும்பினார். வீட்டின் கதவு பூட்டியிருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் கதவை திறந்து உள்ளே வேகமாகச் சென்றார். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் சுயநினைவில்லாமல் சர்கார் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனே சிறுமியை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனக் கூறினர்.
இதுகுறித்து சர்காரின் பெற்றோர் போலீசல் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி ஹஜ்ராவை கைது செய்தனர். குடிப்பதற்கு பணம் இல்லாததால் 20 ரூபாயை திருடியதாகவும், சிறுமி பார்த்துவிட்டதால் அவளை கொன்றதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளான்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.