லோக்சபா தேர்தலுக்கு முன் தான் கேட்ட பார்மர் தொகுதி வழங்கப்படாததால் தணித்து நிற்க முயன்றதற்காக பாஜக கட்சியில் இருந்து நீக்க்ப்பட்டவர் ஜஸ்வந்த் சிங் . இவர் மீண்டும் கட்சியில் இணைவதற்கான் முயற்சியில் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் .
பாஜகவும் அவரை இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக தெரிகிறது . இதனால் தான் அவரது மகன் மான்வேந்தரா கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தாலும் , கட்சி தரப்பில் இருந்து எந்தவொரு கடினமான தண்டனையும் இதுவரை இல்லை .
இந்நிலையில் 15 மாநிலங்களுக்கான ஆளுநரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது . இதனால் தமிழ் நாட்டின் ஆளுநராக ஜஸ்வந்த் சிங்கை நியமிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றனர் .
இதற்கு முன்னர் பிரதமர் மோடி அவர்களும் ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார் . அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தார் என்ற தகவல் வெளிவரவில்லை .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.