BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 4 June 2014

மக்களவை கூட்டத்தொடரில் கடைசி வரிசையில் அமர்ந்த ராகுல், மக்கள் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும் என்று கூறிய மோடி



16-வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் ஜனநாயக கோயிலான நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.", என உறுதியளித்துள்ளார். 

தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து மக்களவை எதிர்கட்சித் தலைவராக இருக்க மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமரும் பகுதியில் கடைசி வரிசையில் உள்ள இருக்கையிலேயே அமர்ந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media