உத்தர பிரதேசத்தில் உள்ள படான் மாவட்டத்தின், 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, ஊரின் மத்தியில் இருந்த மரத்தில் தூக்கிட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அகிலேஷ் தலைமையிலான மாநில அரசு ஒப்புதல் அளித்து, அதற்காக பரிந்துரைத்துள்ளது.
இந்த வழக்கில், இதுவரை, 2 போலீசார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்றும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் முன்னதாக கோரிக்கை விடுத்தனர்.
பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர், நிவாரண நிதியை நிராகரித்தனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தகவல் குறித்து அறிந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த வழக்கில், இதுவரை, 2 போலீசார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்றும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் முன்னதாக கோரிக்கை விடுத்தனர்.
பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர், நிவாரண நிதியை நிராகரித்தனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தகவல் குறித்து அறிந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.