BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 1 June 2014

பட்டப்பகலில், துப்பாக்கி முனையில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க சென்ற பெண் கற்பழிப்பு


மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்திற்குட்பட்ட பயாந்தர் ரெயில் நிலையம் அருகே பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மே 30ந் தேதி மதியம் 2 மணியளவில் பயாந்தர் ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் வைத்து அப்பெண்ணை தீபக் என்பவர் கற்பழித்துள்ளார். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அப்பெண்ணின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்ட தீபக் அவரை கற்பழித்தாக காவல் நிலைய துணை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அப்பெண் புகார் தெரிவித்ததையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகள் இருவரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media