BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 1 June 2014

கருணாநிதி 91-வது பிறந்தநாள்: இன்று முதல் தொடங்குகிறது 3 நாள் கொண்டாட்டம்

திமுக தலைவர் கருணாநிதியின் 91-வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் 3 நாட்கள் விழா நடக்கிறது.

திமுக மகளிரணி சார்பில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில் திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.

மாலை 6 மணிக்கு இலக்கிய அணி சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில், தமிழறிஞர் பிச்சினிக்காடு இளங்கோவுக்கு ரூ.10 ஆயிரம் கொண்ட கலைஞர் இலக்கிய பொற்கிழியும், கேடயமும் வழங்கப்படுகிறது.

இரவு 7 மணிக்கு செல்வகணபதி தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.

நாளை (2-ம் தேதி) மாலை 4.30 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் திமுக இளைஞரணி சார்பில் திரைப்பட பாடகர்கள் பங்கேற்கும் தெம்மாங்கு தேனரங்கம், தமிழறிஞர்கள் பங்குபெறும் வாழ்த் தரங்கம் நடக்கவுள்ளது. வாழ்த் தரங்குக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார்.

கருணாநிதி பிறந்த நாளான 3-ம் தேதி காலை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்தம் மற்றும் கண் தான முகாம்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அன்று காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்திலும், பின்னர் பெரியார் நினைவிடத்திலும் கருணாநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். காலை 9 மணி முதல் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்து பெறுகிறார். மாலையில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் பிறந்தாள் விழா பொதுக்கூட்டத்திலும் கருணாநிதி பங்கேற்கிறார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media