கடந்த சில நாட்களாக சச்சின் - ஷரபோவா இருவருக்காக ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர் . சிலர் சச்சினுக்கு ஆதரவாகவும் சிலர் ஷரபோவாவுக்கு ஆதரவாகவும் இருக்கின்றனர் . கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு அமைச்சர் பெண்களை இழிவாக பேசினார் , அப்போது எதிர்ப்பு காட்டாத அனைவரும் இப்போது பொங்கி கொண்டு வருவது , வியப்பி ஆழ்த்துகிறது . நாம் சண்டை போட்டுக் கொண்டு இருக்க அவர்கள் இருவரும் தங்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர் .
சரி ,அது போகட்டும் !!! . அவர் தெரியாது என்று சொன்னாரே , உங்களில் எத்தனை பேருக்கு சீதா சாகு தெரியும் . பாதி மக்களின் பதில் தெரியாது என்பதாகவே இருக்கும் . இப்போது இந்த சீதா சாகுவிற்கு ஆதரவாக பேச எத்தனை மக்கள் வருவார்கள் என்று கேட்டால் , பதில்கள் மிக குறைவாகவே இருக்கும் .
யார் இந்த சீதா சாகு !!!
ஏதென்ஸில் 2011 ஆம் ஆண்டு நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு வெண்கள பதக்கம் வென்ற வீராங்கணை . 200 மீட்டர் மற்றும் 1600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்றார் .
இப்போது இவர் என்ன செய்கிறார் தெரியுமா ??
ரோட்டோரோங்களில் பானிப் பூரி கடை நடத்தி வருகிறார் . வெண்கள விருதுகள் வாங்கிய கைகள் , இன்று பானி பூரி உடைத்து வருகிறது . அம்மாநில முதல்வர் உதவுகிறேன் என்று சொன்னவர் தான் இன்று வரை எந்த ஒரு நிதியும் தரவில்லை .
இவர் மட்டுமில்லை இன்னும் எத்தனையோ திறமைகள் பாத்திரங்கள் கழுவிக் கொண்டும் , செருப்பு தைத்துக் கொண்டும் தங்களுக்கான வாய்ப்புகளுக்காக காத்து இருக்கின்றனர் . இவர்களுக்கான களத்தை உருவாக்குவதே நமது கடைமையாக இருக்க வேண்டும் .
கடைசியாக ஒரு டவுட்டு , தெரியாத ஒன்றை தெரியாது என்று தானே கூற முடியும் !!!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.