கடந்த மாதம் குமுதம் நாளிதழ் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை யாருக்கு கொடுக்கலாம் என ஒரு மினி தேர்தலை நடத்தியது. இதில் அஜித்தை பின்னுக்கு தள்ளி இளைய தளபதி விஜய் முதல் இடம் பிடித்தார். ஆனால் இதில் உண்மையில் வென்றது அஜித் தான் இது ஒரு பொய்யான தகவல் என சர்ச்சை வெளி வந்தது. இதனால் விஜய் அஜித் ரசிகர்களுக்கு சண்டை நடந்து வந்தது. விஜய் மீது பலருக்கு ஒரு தவறான கருத்து நிலவியது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக விஜய் அவார்ட்ஸில் விஜய்யின் பேச்சு இருந்தது.
நான் என்றைக்குமே பழையதை மறக்காதவன். எனக்கு இளைய தளபதி பட்டமே போதும் , தான் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படவில்லை என்றார். ஆனால் இப்போது விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதுரையில் ஒரு பிராம்மண்ட விழாவை நடத்தி அதில் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை கொடுக்க இருக்கிறார்கள். இதில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை.
இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் யார் என்றால் அது குமுதம் நாளிதழ் தான். பிரச்சனை வரும் என தெரிந்தும் தேவை இல்லாமல் இந்த போட்டியை நடத்தி விட்டு இப்போது அமைதி ஆகி விட்டது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.