BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 17 July 2014

லெஸ்பியன் தோழி பிரிந்ததால் ஆத்திரம், ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பெண், குமரி மாவட்டத்தில் நடந்த கூத்து


குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த 20 வயது  பெண்கள் இருவரும் பள்ளியில் படிக்கும்  போதே இணைபிரியா தோழிகளாக இருந்தனர்,  இருவரும் ஒரே பொறியியல் கல்லூரியில்  சேர்ந்தனர். இந்நிலையில், இவ்விரு பெண்களுக்கும் லெஸ்பியன் உறவு ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் லெஸ்பியன் உறவு கொண்டு வந்துள்ளனர்.  இந்நிலையில், ஒரு பெண்ணின் நடவடிக்கையில் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.  பெற்றோர்கள் கண்காணித்ததில் மற்றொரு பெண்ணுடன் லெஸ்பியன் உறவு பழக்கம் இருப்பது தெரிய வந்ததை அடுத்து தங்களது மகளை கண்டித்தனர். மேலும் அப்பெண்ணை வேறு கல்லூரிக்கு  மாற்றி விடுதியில் தங்க வைத்தனர். இருந்தாலும் இவ்விரு பெண்களிடையே யாருக்கும் தெரியாமல் லெஸ்பியன் பழக்கம் தொடர்ந்துள்ளது.

இதனிடையே பெற்றோர்கள் விடுதியில் இருந்து அந்த பெண்ணை அழைத்து வந்து பக்குவமாக பேசி மனதை மாற்றிவிட்டனர், இதனால் இப்பெண் தன்னுடையை தோழியிடமிருந்து விலகினார், இதனால் அதிர்ச்சி அடைந்த தோழி அப்பெண்ணின் வீட்டிற்கே சென்று தகராறில் ஈடுபட்டார், மேலும் பெற்றோர் பேச்சை கேட்டுக் கொண்டு தன்னை ஒதுக்கிய தனது லெஸ்பியன் பார்ட்னரை பழிவாங்க நினைத்தார், இந்த பெண்கள் இருவரும் லெஸ்பியன் உறவில் இருந்த போது எடுத்த ஆபாச புகைப்படங்களை பேஸ்புக் மற்றும் சில  இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தோழியின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் செய்தனர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை  எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து தனது படங்களை இணையதளத்தில்  வெளியிட்ட அப்பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் தோழி வழக்கு தொடர்ந்துள்ளார். 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media