BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 17 July 2014

உண்மையை சொன்னதற்காக பெண் டாக்டரின் ஆடைகளை அவிழ்த்த கேவலமான கும்பல்




பெங்களூரில் உள்ள ஒரு அங்கன்வாடியில் வழங்கப்பட்டு வரும் உணவு தரமற்றவையாக இருந்து வந்தது. இது குறித்து அங்கே இருந்த சுகாதார மையத்தில் உள்ள ஒரு பெண் டாக்டர் இது குறித்து அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவரிடம் புகார் கூறினார்கள். ஆனால் இதனை அந்த அங்கன்வாடி தலைவர் நிராகரித்தார்.




அதன் பின்பு ஒரு கும்பல் வந்து அந்த டாக்டரின் ஆடைகளை அவிழ்த்து அவரை அவமானபடுத்தி உள்ளார்கள். இதனால் அந்த டாக்டர் மன வேதனை அடைந்து உள்ளார். இது குறித்து அவர் போலீஸிடம் புகார் கொடுத்து உள்ளார். போலீஸார் அந்த கும்பலில் இருந்த 5 பெண்களை கைது செய்து உள்ளார்கள்.
அவர்கள் மீது ஐபிசி 354 இன் கீழ் வழ்க்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.


நாம் எப்போது தான் திருந்த போகிறோம் என தெரியவில்லை. திருட்டு , ஊழல், கொலை, கற்பழிப்பு போன்றவற்றில் இருந்து இந்த பாரத நாடு என்று விடுபடுமோ என்று தெரியவில்லை. கடவுளாக மதிக்கப்பட வேண்டிய டாக்டருக்கே இந்த நிலைமை.





Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media