காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தின் ஆதிக்கம் தான் தொடர்ந்து வருகிறது . அதனை ஆழ்ந்தவர்கள் முழுவதும் நேரு குடுமபத்தினர் தான். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி , ராகுல் காந்தியை தொடர்ந்து 5 வது தலைமுறையாக பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான் நேற்று பாராளுமன்றத்திற்கு வந்தார். இவர் பிரியங்கா காந்தி வதோராவின் மகன் ஆவார்.
இவர் அவை நடவடிக்கைகளை பார்ப்பதற்காக தனது மூன்று நண்பர்களுடன் வந்து இருந்தார். அவருக்கு இப்போது தான் 13 வயது ஆகிறது. அவர் அங்கு இருந்த பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து அமைதியாக அவை நடவடிக்கைகளை கவனித்தார். வெளியே செல்வதற்கு முன் பாட்டி சோனியா காந்தியை சந்தித்து பேசி விட்டு சென்றார். இவர் வந்த போது இவர் மாமா ராகுல் காந்தி அவையில் இல்லை. இவர் வந்ததால் காங்கிரஸ் எம்.பி. க்கள் பரபரப்புடன் காணப்பட்டனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.