பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ராமானுஜ் வர்மா. இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர். அவர் வீடு நோக்கி நடந்து கொண்டு இருந்தார்கள். அப்போது அவரை 2 சகோதரர்கள் வழி மறித்து பிரச்சனை செய்து உள்ளார்கள். எல்லை மீறி வர்மாவை தாக்கவும் செய்து உள்ளார்கள். அது மட்டுமில்லாமல் அடுத்தமுறை இவர்கள் வர்மாவை பார்க்கும் போது அவரது மீசை இருக்க கூடாது என மிரட்டி உள்ளார்கள். இல்லையென்றால் அவர்களே மீசையை எடுத்துவிடுவதாக கூறி உள்ளார்கள்.
ஆனால் வர்மா இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை . அவர்களை எதிர்த்து உள்ளார், இதனால் கோபமான அவர்கள் சில கூட்டாளிகளை சேர்த்து கொண்டு வர்மாவை கடுமையாக தாக்கி உள்ளார்கள் . அதோடு விட்டுவிடாமல் அவரது காதை அறுத்து விட்டு அவரது பைக்கையும் திருடி சென்று உள்ளார்கள். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
என்ன கொடுமை சார் இது !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.