சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள ஒரு கட்டிடம் கடந்த மாதம் 28 ஆம் தேதி அன்று இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை செய்து கொண்டு இருந்த 61 பேர் பலியாகினர். இது 11 மாடி கட்டிடம் என்பதால் மீட்பு பணிகள் ஒரு வாரம் நடந்தது. இதில் சுமார் 25 பேர் மட்டும் மீட்கப்பட்டனர். அது மட்டுமில்லாமல் இதில் 2 நாய்களும் ஒரு காக்காவும் மீட்கப்பட்டன. அவை புளுகிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதில் ஒரு நாயை ஏற்கனவே ஒரு நபர் தத்து எடுத்து சென்று விட்டார். இப்போது இன்னொரு நாயை நடிகர் சத்தியராஜ் தத்து எடுத்து கொண்டார். தங்கள் வீட்டில் ஏற்கனவே பல வெளிநாட்டு நாய்கள் இருப்பதாகவும் அதனுடன் சேர்த்து இதனை வளர்க்க போவதாகவும் கூறினார். அது மட்டுமில்லாமல் பலரும் தெரு நாய்களை தத்து எடுக்க வேண்டும் என்றார். இந்த செயலை அங்கு இருந்த பொது மக்கள் பாராட்டினர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.