கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நேரு என்பவரின் மகன் கணேஷ் , இவருக்கு 22 வயது ஆகிறது. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் இன்ஜினியர்ங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையை கொண்டாட அவரது நண்பன் ஜெகன் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு கணேஷ், ஜெகன் மற்றும் ஜெகனின் நண்பன் ஆகியோர் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்று உள்ளார்கள். அவர்கள் இரவு வரை ஆனந்தமாக குளித்து கொண்டு இருந்தார்கள். கொஞ்சம் நேரம் கழித்து பார்த்த போது கணேஷை காணவில்லை. நண்பர்கள் தேடி உள்ளார்கள் ஆனால் கணேஷ் கிடைக்கவில்லை.
உடனடியாக அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீஸார், தீயணைப்பு துறையினரை வரவைத்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி தேடினார்கள். அப்போது பாறைகளுக்கு இடையே சிக்கி கணேஷ் பலியாகி இருந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.