இந்திய விவசாய குழுவின் 86 வது தொடக்க விழா நாளில் கலந்து கொண்ட மோடிக்கு அங்கு இருந்த அனைவரும் எழுந்து நின்று சிறப்பு செய்தனர். ஆனால் அவர் பெருந்தன்மையாக அந்த மரியாதை எல்லாம் இந்திய விவசாயிகளை சாரும் என்றார். இந்திய விவசாயம் இப்போது மிக மோசமான நிலையில் உள்ளது. இன்னும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்திய விவசாயத்தை உயிர்பிக்க மோடி 3 மந்திரங்களை கூறியுள்ளார்.
1. சிறிய நிலத்தில், குறைவான நேரத்தில் அதிக விளைச்சலை கொண்டு வருவது.
2. ஒரு சொட்டு நீருக்கு அதிக விளைச்சல். நமது நீர்பாசன முறையில் புதிய திட்டங்களை உருவாக்குமாறு விஞ்சானிகளை கேட்டு கொண்டார்.
3. விவசாயத்தில் வேகமாகவும் விவகமாகவும் செயல்பட வேண்டும், அதற்காக தரத்தில் எந்த மாற்றமும் இருக்க கூடாது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.