இன்று தான் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நாள். காஷ்மீரின் எல்லை பகுதியான கார்கிலில் 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் படைகள் ஊடுருவி வந்தன . அவர்களை எதிர்க்க இந்தியா போருக்கு தயாரானது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்காக 527 பேர் தங்களின் உயிரை தியாகம் செய்தனர். இந்த போரில் 1363 இந்தியர்கள் காயமுற்றனர். ஆனால் பாகிஸ்தான் சார்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம் ஆகும்.
இன்றைய தினம் தான் "கார்கில் வெற்றி தினமாக " கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று 15 வது வெற்றி தினம் ஆகும். நாம் இன்று சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களது நாளையை இழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நமது சார்பில் அஞ்சலி செலுத்துவோம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.