இஃப்தார் நோன்பில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது ஸ்டைலில் ஒரு குட்டி கதையை சொல்லி உள்ளார். ஒரு கூட்டத்தில் நபிகள் நாயகம் கலந்து கொண்டார். அப்போது அதில் கலந்து கொண்ட ஒரு குடிகாரன் தனக்கு இஸ்லாம் மதத்தில் இடம் உண்டா என கேட்டான். உடனே அருகில் இருந்தவர் குடிகாரர்களுக்கு இஸ்லாமில் இடம் இல்லை என்றார். அதற்கு நபிகள் நாயகம் இடம் உண்டு ஆனால் இறைவனை தொழும் போது மட்டும் குடிக்க கூடாது என்றார். அவனும் ஒத்துக்கொண்டு இஸ்லாமில் சேர்ந்தான்.
தினமும் காலை தொழுவதால் அவன் காலை குடிப்பதை விட்டான். பிறகு மாலையும் தொழ வேண்டும் என நபிகள் நாயகம் கூறினார். இப்படியே படிப்படியாக எல்லா வேளையும் தொழ வேண்டும் என கூறினார். இதனால் அவன் குடிப்பழக்கத்தையே விட்டான். இப்படி நபிகள் நாயகம் நற்பண்புகளை மட்டும் போதிக்காமல் அது படியும் வாழ்ந்து காட்டினார். அவரது போதனைகளை கடைப்பிடித்தால் இந்தியா அமைதி பூங்காவாக மாறும் என்றார் ஜெயலலிதா. இந்த கதையை நபிகள் நாயகத்தின் பெருமையை கூறுவதற்காக கூறினார்.
நபிகள் நாயகம் குடிக்க வேண்டாம் என்றார் ஆனால் ஜெயலலிதா குடி என்கிறார். ஜெயலலிதா குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி கொண்டு இருக்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.