இந்தியாவில் தொலைதொடர்பில் சிறந்த நெட்வொர்க் என்றால் அது ஏர்டெல்லும், வோடாபோனும் தான். இங்கு பல நெட்வொர்க் இருந்தாலும் பலரையும் கவர்ந்தது இந்த இரு நெட்வொர்க்குகள் தான். இப்போது ஏர்டெல்லையையும் முந்துவதற்கு வோடாபோன் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. அதற்காக தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பரிசு திட்டம் ஒன்றை அறிவித்து உள்ளது. இதன் மூலம் அவர்களிடம் உள்ள வாடிக்கையாளர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள். மற்றும் புதிய வாடிக்கையாளர்களை இது கவர் செய்யும்.
இந்த திட்டத்தின் பெயர் " எவரி ரீசார்ஜ் வின்ஸ் " என்பது ஆகும். இந்த திட்டம் இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பரிசு தரும் திட்டமாக உள்ளது. ஒரு வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்த 4 மணி நேரத்தில் அவருக்கு பரிசு வந்து விடும். பரிசு கூடுதல் பேசும் நேரம், இலவச இன்டெர்னெட், இலவச எஸ்.எம்.எஸ். போன்றவையாக இருக்கும். அதிகமாக ரீசார்ஜ் செய்தால் பரிசும் அதிகமாக இருக்கும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.