சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து உடனான தொடரில் இந்திய அணி 3-1 என படுதோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது விராத் கோலியின் பேட்டிங் சொதப்பல் தான் என கூறப்படுகிறது. விளையாடிய 5 டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் கூட விராத் சரியாக ஆடவில்லை. இந்த தொடரில் அவர் அடித்த ரன்களை விட உபரி மூலம் வந்த ரன்கள் அதிகமாக இருந்தது. கோலியின் இந்த பேட்டிங் சொதப்பலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அனுஷ்கா ஷர்மா என்று ஒரு கூட்டம் சொல்லி வருகிறது.
இங்கிலாந்து உடனான முதல் 3 டெஸ்ட் வரை அனுஷ்கா சர்மா கோலியுடன் இருந்துள்ளார். இதற்காக அவர் பிசிசிஐ யிடம் அனுமதி வாங்கியுள்ளார். இது குறித்து இந்திய அணியின் நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்ற நாட்டு வீரர்கள் கூட வெளிநாட்டு போட்டிகளுக்கு செல்லும் போது தங்கள் காதலியை தங்களுடன் அழைத்து செல்கிறார்கள். ஆனால் நம் கலாச்சாரம் என்பது வேறு. எனவே பிசிசிஐ இதனை அனுமதிக்க கூடாது என கூறியுள்ளார்.
ஆனால் விராத் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்று ஒரு செய்தி வந்து உள்ளது. இதனால் அனுஷ்கா ஷர்மா விராத்துடன் தங்குவதற்கு அனுமதிக்கலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அனுஷ்கா ஷர்மா தான் விராத் கோலியை திருமணம் செய்து கொள்ள போவதாக வந்து உள்ள செய்தி பொய்யானது என கூறியுள்ளார். எனவே இது குறித்து மேலும் பேசுவதை தவிர்க்கவும் என கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.