தல அஜித்தின் வீடு சென்னையில் உள்ள திருவான்மியூரில் உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று இரவு 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்த ஒருவர் தல அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும் விரைவில் அது வெடிக்க போவதாகவும் சொல்லி விட்டு போனை கட் செய்து விட்டார். இது குறித்து உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் அஜித் வீட்டுக்கு சென்ற போலீஸார் அங்கு தீவிர சோதனை செய்துள்ளார்கள். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் போன் வந்த அந்த நம்பரை வைத்து போலீஸார் விசாரணை செய்து வந்துள்ளார்கள். அந்த நம்பர் மதுரையை சேர்ந்த வினோத் என்னும் என்னும் 23 வயது வாலிபருடையது என்று தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்த போலீஸார் விசாரணை செய்து உள்ளார்கள். அதில் அந்த இளைஞர் தனது செல்போன் தொலைந்து விட்டதாகவும், வேறு யாரோ ஒருவர் அந்த நம்பரை வைத்து கால் செய்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.