BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 29 January 2014

1984 சீக்கியர் படுகொலை, 2002 கலவரம் பற்றி ராகுல் கூறியது தவறு: அருண் ஜெட்லி

டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, சீக்கியர் படுகொலை நடந்த போது, அதை அப்பொழுது இருந்த ராஜீவ் காந்தி அரசு தடுக்க முயன்றது. 2002ல் நடந்த குஜராத் கலவரத்தை மோடி அரசே தலைமை தாங்கி நிகழ்த்தியது என்று கூறினார்.இதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் அருண் ஜேட்லி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

1984ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியன்று இந்திரவின் உடல் வைக்கப்பட்டிருந்த எய்எம்ஸ் மருத்துவமனையில் இருந்து வன்முறை வெடித்தது. காங்கிரஸ் தலைவர்களே வன்முறைக்கு தலைமை தாங்கினர். ஆயிரக்கணக்கான இடங்களில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எந்த ஒரு இடத்திலும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. எவர் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் 2002 குஜராத் கலவரத்தின் போது ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கலவரக்காரர்கள் 300க்கும் மேற்பட்டோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதனால்,1984ஆம் ஆண்டு சீக்கியர் கொலையில் ராஜிவ் அரசு பங்கெடுக்கவில்லை என்று எப்படித்தான் ராகுல் காந்தி சொல்கிறாரோ என தெரியவில்லை என்று ஜேட்லி கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media