BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 17 February 2014

சென்னையில், இழவு வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது, 3 பேர் கவலைக்கிடம்

சென்னை மைலாப்பூரை சேர்ந்த அரிகரன் என்பவர், வேளச்சேரியில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அவரது உடல் நேற்று அவரது வீட்டில், குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அவரின் உறவுக்கார பெண்கள் ஏராளமானோர் குளிர்சாதன பெட்டி மீது படுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஆறு பெண்கள் தூக்கி வீசப்பட்டனர். இதனால் இழவு வீடே பரபரப்பானது. மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் ஆறு பேரும் பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இவர்களில் மூவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media