BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 17 February 2014

கோலி சோடா படத்தில் நடித்ததற்கு தனக்கு பணம் தரவில்லை:பவர் ஸ்டார்


இன்றைய சினிமா எனும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், கோலி சோடா படத்தில் நடித்த தனக்கு அந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான விஜய் மில்டன் பணம் தராமல் ஏமாற்றியதாக கூறியிருக்கிறார்.

விழாவில் அவர் பேசியதாவது: "கோலி சோடா படத்தில் நடிக்க 6 நாட்களுக்கு கால்ஷீட் கேட்டார்கள். ஆனால் மூன்றே நாட்களில் முடித்துவிட்டார்கள். இதில் நடிக்க ஒரு சிறிய தொகையை மட்டும் முதலில் கொடுத்தார்கள். மீதிப் பணத்தை பிறகு தருவதாக கூறியவர்கள், கடைசி வரைக்கும் தரவே இல்லை. இதைப் பற்றி கேட்ட போது, "கொடுக்க முடியாது போய்யா.. யார் கிட்ட வேணா சொல்லிக்க'ன்னு கேவலமாக பேசுகிறார்கள். ஆனால் பலரும் நான்தான் அடுத்தவர்களை ஏமாற்றுவதாக சொல்கிறார்கள். உண்மையில் நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். அந்த உழைப்புக்குக் கூட உரிய பணம் தராமல் ஏமாற்றுகிறார்கள்."


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media