திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற திமுகவின் மாநில மாநாட்டில் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்திருந்தனர். இவர்களில் சேலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜன் (வயது 70), தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் (வயது 50), கரூர் மாவட்டத்தை சேர்ந்த டி. கிருஷ்ணன் (வயது 55) ஆகியோர் மாநாட்டு வளாகத்திலேயே உயிரிழந்தனர்.
ஓய்வுபெற்ற ஆசிரியர் நடராஜனுக்கு, மாநாட்டு பந்தலில் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மு.க. ஸ்டாலின், நேரு ஆகியோர் வளாகத்தில் இருந்த தற்காலிக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காமராஜ், கார் பார்க்கிங் பகுதியில் வாகனத்தில் அமர்ந்தபடியே தலைவர்கள் பேச்சைக் கேட்டு கொண்டிருந்தபடியே உயிரிழந்தார். கிருஷ்ணனும் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.