BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 17 February 2014

இடிந்தகரை போராட்டக்காரர்களை லோக்சபா தேர்தலில் போட்டியிட வைக்க ஆம் ஆத்மி கட்சி திட்டம்



கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டக்காரர்களை தங்கள் கட்சியில் சேர்த்து கொண்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பதினைந்து எம்.பி. தொகுதிகளில் போட்டியிட வைக்க,  அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது, ஆம் ஆத்மி கட்சி. உறுப்பினர் சேர்க்கை முடிந்த பிறகு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பதினைந்து தொகுதிகளில் ஊழல் செய்யாத புதுமுகங்களை தேர்தலை சந்திக்க‌ ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆம் ஆத்மியின் இந்த திட்டம், வரவேற்கபட வேண்டியது என நினைத்தால், லைக் போடுங்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media