BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 17 February 2014

குறைந்த விலையில் செயல்படும் "மக்கள் ஆட்டோ" நிறுவனத்தை எதிர்த்து ஆட்டோ டிரைவர்கள் அராஜகம்

கோவையில் குறைந்த விலையில் செயல்படுத்தப்படும் "மக்கள் ஆட்டோ" நிறுவனத்தை எதிர்த்து ஆட்டோ டிரைவர்கள் அராஜகம்


ஆட்டோ என்றாலே கட்டண அராஜகம், மீட்டர் போடாமல் கட்டணம் பேசுவது என்ற நடைமுறையே இருந்துவருகிறது, அரசு ஆட்டோக்களுக்கு கட்டண நிர்ணயம் செய்தாலும் அதை மதிக்காமல் மீட்டர் போடாமல் அடாவடி செய்வது பெரும்பாலானா ஆட்டோ ஓட்டுனர்கள் வழக்கம்.

இந்நிலையில்  கோவையில் மக்கள் ஆட்டோ என்ற பெயரில் கால் ஆட்டோ சர்வீஸ் பொது மக்களுக்கு பயனளிக்கும் விதமாக அறிமுகமாகி நேர்மையாக மீட்டர் கட்டணம் வசூலிக்கிறார்கள். பயணிகளிடம் மினிமம் ரூ.16 அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கு ரூ.6 என கட்டணம் வசூலிக்கிறார்கள்.

இது பொறுக்குமா தொழிற்சங்கத்தினருக்கு, இன்று இரயில் நிலையத்தில் ஒரு மக்கள் ஆட்டோவை வழிமறித்து ரோட்டில் அதை தலைகீழாக கவிழ்த்திருக்கிறார்கள், மக்கள் ஆட்டோ டிடைவர்களையும் தாக்கியுள்ளனர் சில ஆட்டோ தொழிற்சங்கத்தினர், மேலும் மாவட்ட கலெக்டரிடம் இன்று "மக்கள் ஆட்டோ" நிறுவனத்தை எதிர்த்து மனு கொடுத்துவிட்டு வரும் போது காந்திபுரத்தில் தான் இத்தனை மோசமாக நடந்துள்ளார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள்.

மக்கள் நலனை மறுப்பதில் கார்ப்பொரேட்களுக்கு இணையாக தொழிற்சங்கங்களும் கயமைத்தனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் போல தோன்றுகிறது ! தோழர்கள் சிந்திப்பார்களா ? என்று ஓசை செல்லா அவர்கள் தனது ஃபேஸ்புக் ஸ்டேட்டசில் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media