BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 17 February 2014

நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை எஸ். ஏ. சந்திரசேகருக்கும் மோதல்

நடிகர் விஜய், தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை, தன் நீலாங்கரை வீட்டுக்கு அழைத்து ஆலோசனை நடத்தி, இனி மன்றம் குறித்து தன் தந்தை சந்திரசேகரிடம் யாரும் கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்று கூறிவிட்டாராம். இந்த நிலையில் சமீபத்தில் 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை தனது நீலாங்கரை இல்லத்துக்கு அழைத்த விஜய், 'இனி மன்றத்தின் பேனர்கள், போஸ்டர்களில் சந்திரசேகர் பெயரை, படத்தைப் போடக்கூடாது. குறிப்பாக கிங்மேக்கர் என்றெல்லாம் எழுதக்கூடாது' என்று உத்தரவிட்டுள்ளாராம்.

மகன் அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டுமென விரும்பிய சந்திரசேகர், தலைவா படத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு பிறகு, விஜய்யின் சினிமா மற்றும் ரசிகர் மன்ற நடிவடிக்கைகள் அனைத்திலும் ஒதுங்கியே நின்று வருகிறார்.

வழக்கமாக ரசிகர்கள் உடனான கூட்டங்கள், விஜய்யின் வடபழனி கல்யாண மண்டபத்தில்தான் நடக்கும். ஆனால் "இனி அங்கு யாரும் போக வேண்டாம்.  நீலாங்கரை வீட்டுக்கே வந்துவிடுங்கள்." என்று விஜய் கூறிவிட்டாராம். தந்தையும் மகனும் இப்படி மோதிக் கொள்ளக் காரணம் என்று மன்றத்தின் செயலாளரான புஸ்ஸி ஆனந்தைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அவரோ, இந்த விவகாரத்தில் அனைத்து முடிவுகளையுமே விஜய்தான் எடுத்தார் என்று கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media