அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று குஜராத் மாநிலத்திற்கு அரசியல் காரணங்களுக்காக சென்றிருந்த போது, பாஜகவினர் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதை தொடர்ந்து, போலீச்சார், கேஜ்ரிவாலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பின்னர் விடுவித்தனர். இந்த தகவல் கிடைத்ததும், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆத் ஆத்மி - பாரதிய ஜனதா கட்சியினரிடையே நேற்று மோதல் வெடித்தது.
மோதலில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 14 பேரை டெல்லி போலீசார் புதன் கிழமை இரவு கைது செய்தனர்.
வன்முறையில் ஈடுபட்டது, அரசு ஊழியரை பணியை செய்யவிடாமல் தடுத்தது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி முக்கிய பிரமுகர்கள் அசுதோஸ், சாஷியா இல்மி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 14 பேரும் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.