பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி இன்று நிதிஷ் குமார் 'சங்கல்ப் யாத்திரை' மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, "பிரதமர் பதவிக்காக வலம் வருபவர்களைவிட, நான் அதிக தகுதிகளைக் கொண்டிருக்கிறேன்" என்றார்.
நரேந்திர மோடி பெயரையோ, ராகுல் காந்தி பெயரையோ அவர் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், "ஒருவருக்கு நாடாளுமன்றத்தைப் பற்றி எந்த அனுபவமும் இல்லை, இன்னொருவருக்கு மாநிலத்தில் ஆட்சி செலுத்துவது எப்படி என்பது தெரியாது. ஆனால் நாடாளுமன்ற அரசியல் அனுபமும், ஆட்சி செலுத்தும் அனுபவமும் என்னிடம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது பிரதமர் பதவிக்கு எனக்கே முழு தகுதியும் இருக்கிறது" என்று நிதிஷ் குமார் கூறியிருந்தார்.
பிரதமர் பதவிக்கு போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, நிதிஷ் குமார், "ஐக்கிய ஜனதா தள கட்சியின் முதன்மை இலக்கு மக்களுக்கு சேவை செய்வதே ஆகும். இருந்தாலும், மக்கள் மத்தியில் ஆதரவைப் பெருக்க வேண்டும் என்ற கொள்கை எங்களுக்கும் இருக்கிறது." என்று பதில் அளித்தார்.
நிதிஷ் குமார் சொல்வது போல், ராகுல் காந்தி மற்றும் மோடிக்கு பிரதமர் ஆக தகுதி இல்லை என நினைத்தால், ஏன் என்று உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.