BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 6 March 2014

ஜெ. மற்றும் இரட்டை இலை படங்களை மறைக்க கோரி ஸ்டாலின் வழக்கு


ஏற்காட்டில் நடந்த இடைத்தேர்தலின்போது தமிழக அரசின் சிறிய‌ பஸ்கள், குடிநீர் பாட்டில்கள், அரசு சிமெண்ட் ஆகியவற்றில் உள்ள முதல் அமைச்சர் ஜெயலலிதா படம் மற்றும் இரட்டை இலை சின்னங்களை மறைக்க வேண்டும் என்று கோரி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் நீலகண்டன் இன்று நீதிபதி ராஜா முன்பு ஆஜராகி கூறியதாவது:

அரசு பொது நிறுவனங்கள் மூலம் சிமெண்ட் மற்றும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஜெயலலிதா படமும், இரட்டை இலைகள் மட்டும் பொறிக்கப்பட்டு உள்ளன. இதேபோல அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கும் சிறிய‌ பஸ்களிலும் இதே மாதிரி படங்கள் இடம் பெற்றுள்ளன.

தற்போது பாராளுமன்ற தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,அரசின் சிறிய பஸ், குடிநீர் பாட்டில்கள், அரசு சிமெண்ட் பைகள் ஆகியவற்றில் உள்ள ஜெயலலிதா மற்றும் இரட்டை இலைகள் படங்களை திரையிட்டு மறைக்க தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு உத்திரவிட வேண்டும். இது தொடர்பான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு வழக்கறிஞர் நீலகண்டன் உயர் நீதிமன்றத்தில் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media