BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 6 March 2014

இலங்கைக்கு தொடர்ந்து ராணுவப் பயிற்சியளிப்பதாக இந்தியா உறுதி, தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு


கடலோர பாதுகாப்பு குறித்து இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய மூன்று நாடுகளின் பாதுகாப்பு செயலாளர்கள் மட்டத்திலான கூட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. இக்கூட்டத்தின் போது, நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிசங்கர் மேனனை கோத்தபய ராஜபக்சே சந்தித்தபோது, அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சியளிக்கப்படும் என அவரிடம் உறுதியளித்தார்.

தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை ராணுவம் அடித்து துன்புறுத்தி, சிறை பிடித்து செல்லும் நிலையில் அந்நாட்டுக்கு ராணுவ பயிற்சி அளிப்பது தொடரும் என மேனன் கூறியது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media