கடலோர பாதுகாப்பு குறித்து இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய மூன்று நாடுகளின் பாதுகாப்பு செயலாளர்கள் மட்டத்திலான கூட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. இக்கூட்டத்தின் போது, நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிசங்கர் மேனனை கோத்தபய ராஜபக்சே சந்தித்தபோது, அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சியளிக்கப்படும் என அவரிடம் உறுதியளித்தார்.
தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை ராணுவம் அடித்து துன்புறுத்தி, சிறை பிடித்து செல்லும் நிலையில் அந்நாட்டுக்கு ராணுவ பயிற்சி அளிப்பது தொடரும் என மேனன் கூறியது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.