குஜராத்தில், நரேந்திர மோடி கூறுவது போல் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்று நேரில் சென்று ஆய்வறிய, நேற்று குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார், அரவிந்த் கேஜ்ரிவால்.
நேற்றிரவு நிருபர்களுக்கு பேட்டியளித்த கேஜ்ரிவால், "என்னை தடுத்து நிறுத்தும் விதமாக நரேந்திர மோடியும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டு செயல்பட்டனர். எனது வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தும்படி, கருப்புக் கொடியுடன் சிலரை மோடி அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் இப்படி செய்வார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். நான் பார்த்த வரையில் மோடி கூறுவது போல் குஜராத் அணு அளவு கூட வளரவே இல்லை’ என்று தெரிவித்தார்.
மேலும் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடியை விமர்சித்து பேசிய கேஜ்ரிவால், "அம்பானிக்கும், அதானிக்கும் மட்டுமே மோடி வளர்ச்சியை தருகிறார். குஜராத் வளர்ச்சி பெற்றதாக ஊடகங்களின் வாயிலாக மோடி அறிக்கை வெளியிட்டு வருகிறார். அந்த வளர்ச்சியை யாராவது பேசி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? மக்கள் அவர்களுடைய வேதனையை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். " என்று கூறினார்.
கேஜ்ரிவால் கூறுவதில் உண்மை இருக்கிறது என நினைத்தால், லைக் போடுங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.