BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 6 March 2014

சென்னை உயர்நிலைப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள்


மாண‌வர்களின் பாதுகாப்பு கருதி சென்னை மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. 32 மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்கெனவே 20 பள்ளிகளில் கேமராக் கள் பொருத்தப்பட்டு உள்ளன. இனி மீதமுள்ள 12 மேல் நிலைப்பள்ளிகளிலும் மற்றும் அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில், இந்த கண்காணிப்பு தேவையா என்கிறது சில மாணவர் சங்கங்கள். பெரம்பூர் மார்க்கெட் தெருவில் 1643 பெண்கள் பயிலும் மேல் நிலைப் பள்ளியில் குடிநீர் வசதியில்லை. ஆனால் கேமரா இருக்கிறது என்று கூறுகிறார் புரட்சிகர மாணவர் இயக்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் மருது.

கேமரா மூலம் கண் காணித்து, மாணவ மாணவியர் இயல்பாக பேசிக் கொள்வதை தவறாக புரிந்து கொள்வதாகவும் பெண் ஆசிரியர்களை ஆண் ஆசிரியர்கள் தகாத முறையில் பார்ப்பதாகவும் புகார்கள் வருவதாகவும் இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் நிருபன் தெரிவித்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media