BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 13 March 2014

கற்பழிப்பு புகாரில் சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ, சுற்றி வளைக்கப்பட்டு சரமாரியாக அடி உதை வாங்கினார்


கேரள மாநிலம் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி மீது,  திருவனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் சரிதா நாயர்  என்பவர் கற்பழிப்பு புகார் அளித்து இருந்தார். சரிதா நாயர்,  கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி, சமீபத்தில் ஜாமீனில் விடுதலை ஆனவர்.  அப்துல்லா குட்டி, சோலார் பேனல் தொழில் சம்பந்தமாக பேச வேண்டும் என்று தன்னை நட்சத்திர ஒட்டலுக்கு அழைத்து தன்னை கற்பழித்ததாக புகாரில் கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் அந்த கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக கண்ணூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார். இதுபற்றி அறிந்த கண்ணூர் மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் பிஜூ, 25–க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் அந்த ஓட்டலுக்கு சென்றார். அங்கிருந்த பாதுகாப்பு போலீசாரை தள்ளிவிட்டு விட்டு உள்ளே நுழைந்து, அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ.வை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினார்கள். அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அப்துல்லா குட்டி கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினார். இருந்தாலும் தொடர்ந்து அடி–உதை விழுந்தது.

போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அதிரடிப்படை போலீசாரை அங்கு வர வழைத்தனர். அவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது தடியடி நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். அதன்பிறகு போலீசார் அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ.வை பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media