BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 15 March 2014

திமுகவை விட்டு விலக மாட்டேன், புதிய கட்சி ஆரம்பிக்க மாட்டேன்-அழகிரி

டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, பின் சென்னையில் ரஜினிகாந்தை சந்தித்து , இந்த இரு சம்பவங்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி விட்டு மதுரைக்கு திரும்பிய அழகிரி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில், திமுகவில் இருந்து விலக்கப்பட்டாலும் கூட கட்சியில் இருந்து வெளியேற நான் தயாராக இல்லை. அடுத்தகட்ட முடிவு குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை வடசென்னை முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபுவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அழகிரி நிருபர்களிடம், "நான் அரசியல் ரீதியாக யாரையும் சந்தித்து பேசவில்லை. நட்பு ரீதியாகவும் நலவிரும்பி என்ற முறையிலும் நேரில் பார்த்து பேசுகிறேன். நான் தி.மு.க.வில் இருந்து செயல்படுவேன். தனிக்கட்சி தொடங்கும் திட்டம் எதுவும் இல்லை. எனது ஆதரவாளர்கள் கூட்டத்தை 17–ந்தேதி கூட்டி இருக்கிறேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செயல்படுவேன். ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க. வெற்றி பெறும். யாருடனும் கூட்டணி வைக்க தேவையில்லை." என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media