BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 15 March 2014

மலேசிய விமானம் கடத்தப்பட்டது, மலேசிய அதிகாரி அறிவிப்பு


239 பயணிகளுடன், மலேசியாவில் இருந்து சீனா கிளம்பி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடந்த 8ம் தேதி மாயமானது. தீவிரமாக தேடப்பட்டு வரும் விமானத்தின் நிலை மர்மமாகவே நீடித்து வந்தது. இந்நிலையில், அந்த விமானம், கடத்தபட்டிருக்கிறது என்ற தகவலை பெயர் வெளியிட விரும்பாத மலேசிய அதிகாரி ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். விமானத்தை கடத்தியவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை. விமானத்தை கடத்திக் கொண்டு எங்கு சென்றார்கள் என்ற விவரங்களும் இன்னும் கண்டுப்பிடிக்கப் படவில்லை.

விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற யூகம், உண்மை தான் என முடிவுக்கு வந்தாகிவிட்டது என மலேசிய அதிகாரி தெரிவித்தார். விமானம் ஓட்டுவதில் திறமை படைத்த ஒருவரோ, அல்லது விமானத்தை ஓட்டி வந்த பைலட் ஒருவரோ இந்த கடத்தல் வேலையில் ஈடுப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media