BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 15 March 2014

டெல்லி பாலியல் வழக்கில் இருவர் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை


உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்த, டிசம்பர் 16, 2012 அன்று நடந்த  டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேருக்கு  கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ரேவா கேதர்பால், பிரதிபா ராணி ஆகியோர் விசாரித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தனர். 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், விரைவு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்தனர். இந்நிலையில், இருவர் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media