பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் சிறப்பு கூட்டம் ஒன்று வருகிற 26–ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் மோடியுடன் அமர்ந்து சாப்பிடலாம். ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் கொடுப்பவர்கள் மோடிக்கு அருகில் உட்கார்ந்து சாப்பிடலாம்.
இந்த திட்டத்தின் மூலம் பா.ஜ.க.வுக்கு அன்று ஒரு நாள் மட்டும் ரூ.15 கோடி நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாஜக இதை மறுத்துள்ளது, மேலும் இது குறித்து பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜேவேட்கர், 'மோடியுடன் டீ' என்ற நிகழ்ச்சி மட்டுமே தாங்கள் ஏற்பாடு செய்தது என்றும் மோடியுடன் டின்னர் நிகழ்ச்சியை தாங்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றும் இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்றும் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.