நேற்று ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில். அழகிரி மற்றும் அவரது மகன் துரை தயாநிதி, மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் சந்தித்தனர்.
இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான், ரஜினியிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று அழகிரி தெரிவித்தாலும், அவரது தரப்பில் பேசியவர்கள், ரஜினியிடம் அழகிரி, “கடந்த 96-ம் ஆண்டு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டீர்கள். அதன் பின்பு இப்போது காலம் கனிந்துள்ளது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்து 10 சதவீதம் ஓட்டுகளை எடுக்கும்போது நீங்கள் அரசியலுக்கு வந்தால் 35 சதவீதம் ஓட்டுகளை அள்ளலாம். தமிழகத்தில் சாதி, மதம் இவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டு உங்களுக்கு மட்டுமே மக்களின் செல்வாக்கு இருக்கிறது. எனவே, தயங்காமல் அரசியலுக்கு வாருங்கள். நான் உங்களுக்கு தோள் கொடுக்கிறேன். இப்போதும் 40 சதவீதம் திமுக-வினர் என்னுடன் இருக்கிறார்கள். மேலும் 10 சதவீதம் பேர் ரகசியமாக எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்” என்று கூறியதாக தெரிவித்தனர்.
அழகிரி, தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசியபோது, ரஜினி வருத்தம்தோய அதைக் கேட்டுக்கொண்டார் என்றும், அழகிரி தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ரஜினியுடன் நிறைய பேசினார் என்றும் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
அழகிரியின் தற்போதையத் திட்டம், திமுக-வை மூன்றாவது இடத்துக்கு தள்ளுவதும், அதன் மூலம் தனது இழப்பை புரியவைப்பதும்தான். அதற்காகவே டெல்லியில் அவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அவரிடம் தென் மாவட்டம் முழுவதும் பாஜக வெற்றிபெற தான் உதவி புரிவதாக தெரிவித்துள்ளார் என்று அழகிரி தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருந்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.