அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 5-ந்தேதி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவருடன் சுமார் 20 வாகனங்களில் அவரது கட்சியினரும் சென்றனர். படான் மாவட்டத்தில் வராகி பகுதியில் சென்ற போது அங்குள்ள சுங்கச்சாவடியில் 20 வாகனங்களும் கட்டணம் செலுத்தவில்லை. கட்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட சம்கியாலி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியிலும் ஆம் ஆத்மியினரின் 15 வாகனங்கள் பணம் செலுத்தவில்லை.
இது குறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் முகேஷ் காத்வி மற்றும் தோமர் என்பவர்கள் போலீசில் புகார் செய்தார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் ஆம் ஆத்மியினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த வாகனங்களின் ஓட்டுனர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.