BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 15 March 2014

தேவயாணி மீது அமெரிக்கா இன்று மீண்டும் வழக்கு பதிவு செய்தது, 21 பக்க குற்றச்சாட்டு

அமெரிக்காவிற்கான‌ துணைத்தூதராக இந்தியாவில் இருந்து சென்ற தேவயானி கோப்ரகடே மீது ஏற்கனவே கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் மீது இன்று மீண்டும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில், தேவயானி மீதான விசா மோசடி வழக்கு விசாரணை நடந்து வந்தது. அதில் வழக்கறிஞர்கள் வாதம் முடிந்து கடந்த 12-ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது தேவயானி மீதான விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அமெரிக்க மாவட்ட நீதிபதி ஷிரா செச்சின்ட்லின் தனது 14 பக்க தீர்ப்பில், அவர் கைது செய்யப்பட்ட போது முழு தூதர் தகுதியுடன்தான் இருந்தார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தேவயானி மீது புதிய குற்றச்சாட்டுகள் மன்ஹட்டன் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் சார்பில் இந்திய வம்சாவழியை சேர்ந்த அரசு தரப்பு வக்கீல் ப்ரீத் பராரா இந்த குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்துள்ளார். அமெரிக்க அதிகாரிகளிடம் உண்மையை மறைத்து பொய்யான தகவல்களை அளித்து வேலைக்காரிக்கு விசா பெற்றது, அமெரிக்க சட்டங்களுக்கு உட்பட்டு அவருக்கு சம்பளம் வழங்காதது, போதுமான பாதுகாப்பு அளிக்காதது தொடர்பாக 21 பக்கங்கள் அடங்கிய குற்றச்சாட்டுகள் தேவயானி மீது சுமத்தப்பட்டுள்ளன.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media