ஆற்காட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு மாற்றாக ஒரு மாற்று சக்தி உருவாக வேண்டும்; அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் வறுமையை ஒழிப்போம் என கூறிய கட்சிகள் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்த அதிமுக, திமுக அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
மேலும், மோடி ஆட்சியில் குஜராத் வளர்ச்சியடைந்து உள்ளதாக வியகாந்த் அவருக்கு புகழாரம் சூட்டினார். தமிழகம் போல் இல்லாமல் குஜராத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கிறது என்றார். தமிழக மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்ற விஜயகாந்த், அதற்கு மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரத்தில் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.