BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 19 July 2014

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் பட்டியல்





சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் வைத்திருக்கும் எல்லா இந்தியர்களின் பெயர் பட்டியலை பெறுவதற்கு இப்போதைய அரசு செயல்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். இதற்காக மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. அவர்களும் இந்த செயலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.


சுவிஸ் அரசுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தினால் அந்த வங்கியில் கறுப்பு பணம் வைத்திருப்போரின் பெயர்களை தருவதற்கு மறுத்து வருகிறது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டுமானால் ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் கணக்கு தொடங்கியவர்களின் பெயரை அந்த அரசிடம் கேட்டு வருகிறோம். இதில் உள்ள சட்ட பிரச்சனைகளை ஆராய்ந்து அதனை தீர்ப்பதற்கு முயற்சி செய்து வருகிறோம் என்றார் அருண் ஜெட்லி.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media