அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. ஆண்டுதோறும் தை 3-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடை பெற்று வந்தது. அதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பல்லாயிரம் பேர் திரண்டு வந்தனர். தமிழக அரசே ஜல்லிக் கட்டு போட்டியை அலங்காநல்லூரில் நடத்தி வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து புதன்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே ஜல்லிக்கட்டு கமிட்டி முன்னாள் உறுப்பினர் கோவிந்தராஜ் தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர் உள்பட பலர் அலங்காநல்லூர் மைதானத்துக்கு திரண்டு வந்து, தடையைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
அதன்பின் வாடிவாசல், ஜல்லிக்கட்டு மைதானம், பார்வையாளர்கள் கேலரி, வீதிகள் என பல இடங்களில் கருப்பு கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலங்கா நல்லூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.