சென்னை சென்ட்ரலில் உள்ள நடைமேடை 9ல் நின்று கொண்டிருந்த பெங்களூர்-குவாத்திரயிலில் க்டந்த 1ம் தேதி இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது. இது தொடர்பாக தீவிரவாதிகளை பிடிப்பதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்தபோது, குண்டு வெடிப்பதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னர் வழுக்கை தலை நபர் ஒருவர் வேகமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது. இவர் மீது சந்தேகம் இருப்பதாக சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.
விசாரணைக்குப்பின் ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, “கேமராவில் சிக்கிய சந்தேக நபர் யார் என்பதை உறுதி செய்துவிட்டோம். கேரளத்தை சேர்ந்த அவரது பெயர் உள்ளிட்ட மற்ற விவரங்களை வெளியிட விரும்பவில்லை. குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை” என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.