BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 8 May 2014

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க நல்ல வாய்ப்பு உள்ளது: ப.சிதம்பரம்


கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க காங்கிரசுக்கு மிகவும் நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம், இதுபற்றி மேலும் கூறியதாவது:-

1989 தேர்தலில் 190 தொகுதிகளில் வெற்றி பெற்றும், எதிர்க்கட்சி வரிசையில் உட்கார தலைவர் ராஜீவ் காந்தி முடிவு செய்தார். அதற்குப் பிறகு ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை இப்போது உள்ளது. காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. எந்த கட்சியாக இருந்தாலும் நிலையான அரசை உருவாக்க முன்வருவதுடன், பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். பொறுப்பை தட்டிக்கழித்து தப்பிக்க முடியாது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நாட்டில் தேர்தல் நடத்த முடியாது. காங்கிரஸ் அந்த நிலையில் இருந்தால் ஆட்சியமைக்க முன்வரும்.

இது ஒரே ஒரு தேர்தல் அல்ல; பல்வேறு மாநிலங்களின் தேர்தல். பல்வேறு கட்சிகளின் இறுதி வெற்றி நிலவரங்களை வைத்து பார்க்க வேண்டும். காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதை முன்கூட்டியே கணிக்கக் கூடாது. ஒவ்வொரு கட்சியும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன்தான் தேர்தலை சந்திக்கின்றன. காங்கிரசும் அதே நம்பிக்கையுடன் உள்ளது.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media