BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 8 May 2014

மோடி பொழுது போக்குகாக, தன் உறவினரின் டீக்கடையில் இருந்தவரே தவிர, உண்மையில் டீ விற்கவில்லை- காங்கிரஸ்


பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான மோடி தான் ஒரு காலத்தில் தேநீர் விற்றவர் என்று கூறி வருகிறார். ஆனால் உண்மையில் அவர் தேநீர் விற்றவர் அல்ல என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோஹில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''மோடி ஒரு தேநீர் வியாபாரி அல்ல. அவர் பொழுது போக்கிற்காக தேநீர் கடைக்கு சென்றுள்ளார். அவருடைய உறவினர் ஒருவர் அந்த கேண்டீனை குத்தகைக்கு எடுத்திருந்தார். கஞ்சா விற்பனை செய்ததால் அந்த கடையின் உரிமம் பறிபோனது. இப்படியிருக்க, தேநீர் விற்பனை செய்ததாக மோடி பேசுவது மிகப்பெரிய பொய்யாகும். இந்த தகவலை ஒரு ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரெண்டு என்னிடம் தெரிவித்தார்” என்று கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media