பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான மோடி தான் ஒரு காலத்தில் தேநீர் விற்றவர் என்று கூறி வருகிறார். ஆனால் உண்மையில் அவர் தேநீர் விற்றவர் அல்ல என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோஹில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''மோடி ஒரு தேநீர் வியாபாரி அல்ல. அவர் பொழுது போக்கிற்காக தேநீர் கடைக்கு சென்றுள்ளார். அவருடைய உறவினர் ஒருவர் அந்த கேண்டீனை குத்தகைக்கு எடுத்திருந்தார். கஞ்சா விற்பனை செய்ததால் அந்த கடையின் உரிமம் பறிபோனது. இப்படியிருக்க, தேநீர் விற்பனை செய்ததாக மோடி பேசுவது மிகப்பெரிய பொய்யாகும். இந்த தகவலை ஒரு ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரெண்டு என்னிடம் தெரிவித்தார்” என்று கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.