மோடி அரசு பதவியேற்று நேற்றுடன் ஒரு மாத காலம் முடிந்தது . ஆனால் இது தங்களுக்கு தேனிலவு போல் இல்லை. ஒரு புதிய அரசு பதவியேற்றதும் அவர்களுக்கு ஒரு மாத காலம் தேனிலவு போல் இருக்கும் என்பார்கள். ஆனால் தங்களுக்கு 100 மணி நேரம் கூட தேனிலவு காலம் கிடைக்கவில்லை என்றார் மோடி.இதற்கு முந்தைய அரசு 100 நாள் தேனிலவை அனுபவித்தது என்றார். தங்கள் அரசு பதவியேற்றதும் தங்கள் மீது அதிக எதிர்பார்ப்புகளும் , குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன. அதனால் நாங்கள் அதனை நோக்கி உழைக்க தொடங்கி விட்டோம் என்றார்.
இந்தியாவை மிக பெரிய உச்சத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம் . அதற்கான முயற்சியில் நம்பிகையுடனும், உறுதியுடனும் செயல்படுவோம் . முந்தைய அரசின் 67 ஆண்டு கால ஆட்சியை தங்களின் அரசின் ஒரு மாத ஆட்சியுடன் ஒப்பிட வேண்டாம் . மத்திய அரசை சிறப்பாக செயல்பட வைக்க 2 ஆண்டுகள் ஆகும் என அனைவரும் கூறினார்கள், தானும் அதனை நம்பினார் .ஆனால் இப்போது அந்த கணக்கு தேவையில்லை என்றார். பலமான ஆதரவையும் நல்லாசியையும் வழங்கிய மக்களுக்கு நன்றி என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.